இரண்டு மகள்களையும் மகனையும் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

Prathees
1 year ago
இரண்டு மகள்களையும் மகனையும் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

தனது இரண்டு மகள்களையும் மகனையும் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் மத்தேகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரான மூன்று பிள்ளைகளின் தந்தையை பிணையில் விடுவிக்க நேற்று (29ஆம் திகதி) கஸ்பேவ நீதவான் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளையும் தந்தையின் பிடியில் இருந்து நீக்கி, காலி வந்துரம்ப பிரதேசத்தில் வசிக்கும் பிள்ளைகளின் தாயின் உறவினரான பெண்ணிடம் ஒப்படைக்குமாறு கெஸ்பேவ நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகத்திற்குரிய மூன்று பிள்ளைகளின் தந்தையை மனநல மருத்துவரிடம் ஒப்படைக்குமாறும், சந்தேகநபர் பிள்ளைகள் வசிக்கும் வளாகத்திற்குள் நுழைவதைத் தடைசெய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இதற்கிடையில், சந்தேகநபரால் 16 வயதுடைய மகள் தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், மத்தேகொட பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் குழுவொன்று வீட்டுக்குச் சென்று சந்தேகநபர் அங்கு குழந்தைகளிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் தெரியவந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.

அங்கு தெரியவந்த உண்மைகளின்படி, சந்தேகநபர் இரண்டு வருடங்களாக வெளிநாட்டில் இருந்த வேளையில், அவரது மூத்த மகளுக்குத் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து இந்த நாட்டிற்கு வந்த பிறகு மூத்த மகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

ஏழு வருடங்களாக அவ்வப்போது துஷ்பிரயோகம் செய்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

இதன் பின் வீட்டில் வசித்து வந்த இளைய மகள் மற்றும் மருமகனும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு சிறுமிகள் மற்றும் குழந்தை களுபோவில போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​​மூன்று குழந்தைகளும் பாரியளவில் வல்லுறவுக்கு உட்படுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!