கனமழை வெள்ளத்தில் தவிக்கும் பிரேசில் மக்கள் - நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

Prasu
1 year ago
கனமழை வெள்ளத்தில் தவிக்கும் பிரேசில் மக்கள் - நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் பாரானா மற்றும் சாண்டா கேடரன் உள்பட பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. 

இடைவிடாது கொட்டிவரும் மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். 

உயிர் பிழைப்பதற்காக அவர்கள் வீட்டு மாடிகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர். பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி நடந்து வருகிறது. தெற்கு பிரேசில் பாரானா மாகாணம் போலாரது என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்த நிலச்சரிவில் 2 பேர் இறந்தனர். அந்த சமயம் 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்த ரோட்டில் சென்று கொண்டிருந்தன. 

நிலச்சரிவில் அந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டது. இதில் அந்த வாகனங்களில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. 

அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

தொடர் மழையால் பிரேசிலில் 17 நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!