பேரூந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பணப்பைகள் மற்றும் தொலைபேசிகளை திருடும் குழுவின் தலைவி கைது

Prathees
1 year ago
பேரூந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பணப்பைகள் மற்றும் தொலைபேசிகளை திருடும்  குழுவின் தலைவி கைது

பேரூந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பணப்பைகள் மற்றும் தொலைபேசிகளை திருடும் ஒழுங்கமைக்கப்பட்ட பெண்கள் குழுவின் தலைவி பயணி ஒருவரால் பிடிக்கப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் (02) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் குடாகம பகுதியில் தலவாக்கலையில் இருந்து ஹட்டன் நோக்கி ஓடும் தனியார் பேருந்தில் ஏறிய மூன்று பெண்களில் ஒருவர், பேருந்தில் பயணித்த இளைஞரின் பணப்பையை 65,000 ரூபாவுடன் திருடியுள்ளார். அங்கு பணப்பையை எடுத்துச் சென்ற யுவதியை இளைஞன் பிடித்து அட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சந்தேகமடைந்த யுவதி உடனடியாக பணப்பையை தன்னுடன் வந்த ஏனைய யுவதிகளிடம் கொடுத்ததையடுத்து இரண்டு இளம்பெண்களும் பணப்பையை எடுத்துக்கொண்டு பேருந்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பணப்பையை இழந்த இளைஞன், தனியார் வங்கியில் டெபாசிட் செய்வதற்காக கொண்டு வந்த பணத்தை திருடியதாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தில் தற்காலிகமாக வசிக்கும் சந்தேகநபர் அஹிகுந்திகா குழுவைச் சேர்ந்த யுவதி எனவும்,

தப்பிச் சென்ற இரண்டு சந்தேக நபர்களும் அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பஸ் பயணிகளின் பணப்பைகள் மற்றும் கைத்தொலைபேசிகள் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!