நாட்டில் சூழல் மாசுபாடற்ற எரிசக்தி உற்பத்திக்காக 10 புதிய அணு உலைகளை அமைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு

Keerthi
1 year ago
நாட்டில் சூழல் மாசுபாடற்ற எரிசக்தி உற்பத்திக்காக 10 புதிய அணு உலைகளை அமைக்க  முடிவு செய்துள்ள மத்திய அரசு

பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற டிசம்பர் 29ம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், நாட்டில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. 

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை இணை மந்திரி ஜிதேந்திரா சிங் எழுத்துப்பூர்வ முறையில் இன்று பதிலளித்து உள்ளார். 

பிரதமர் அலுவலகம், அதிகாரிகள், பொதுமக்கள் குறைதீர், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி துறையையும் கவனித்து வரும் அவர் அளித்துள்ள பதிலில், நாட்டில் சுற்றுச்சூழலுக்கு மாசு உண்டாக்காத எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்காக தற்போது கட்டுமான பணியில் உள்ள 8,700 மெகா வாட் திறன் கொண்ட 11 உலைகளுடன் கூடுதலாக, 700 மெகா வாட் திறன் கொண்ட 10 அணு உலைகளை அமைப்பதற்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீட்டுக்கு அரசு அனுமதி அளித்து உள்ளது என கூறியுள்ளார்.