எண் 2க்குரியவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?

#spiritual #Astrology
எண் 2க்குரியவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?

பொதுப்பலன்

 அம்பாளின் அருள் பெற்ற எண் இது.

எண் 2 ( 2,11, 20, 29) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

இரண்டு என்பதும் நம் வாழ்வில் ஓர் முக்கியத்துவம் கொண்ட எண்ணாகும். ஒரு மனிதனுக்கு கண் இரண்டு, காது இரண்டு, கை இரண்டு, கால் இரண்டு என இரண்டின் மகிமையும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் 2 ம் எண்ணின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் ஆவார். இரண்டாம் எண்ணுக்குரிய  ஆங்கில எழுத்துக்கள் B,K .Rஆகியவை.

குடும்பத்தில் முதலில் குழப்பம் இருந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் இருக்கும். திருமண வாழ்க்கை திருப்திகரமாக அமையும். வாழ்க்கையில் இவரை பிறர் அனுசரித்து தான் நடக்க வேண்டும். ஒற்றுமை இருக்கும் அதே சமயம் போரட்டமும் நிலவும்.

இவர் புகைப்படம் பிடித்தல், அழகு, வாசனைப் பொருள், துணிமணி தயாரித்து விற்றல், வேளாண்மை, தோட்டம் போடுதல், மனோதத்துவ மருத்துவராதல், போன்ற தொழிலில் ஈடுபடுவார்கள். இவருக்கு கவிதை எழுதுதல், நடித்தல் பொருத்தமானவை. பிறந்த எண்ணும், கூட்டு எண்ணும் ஒன்றானால் பெயர் எண்படி வாழ்க்கையும் அமையும்.

பகலுக்கு இராஜா சூரியன் என்றால் இரவுக்கு ராணி சந்திரன். சூரியன் தந்தைகாரன் சந்திரன் மாதாகாரகன். எனவே இந்த எண்காரர்களிடம் பெண்மையும், மென்மையும் உண்டு. இவர்கள் ஓரளவு தடித்த தேகத்தினர்தாம். இதில் பிறந்த ஆண்கள் சுருட்டை முடியையும், பெண்கள் நீண்ட முடியையும் கொண்டவர்கள்.

இவர்கள் எவ்வளவு தூரம் வளைந்து கொடுக்கிறார்களோ, பல சமயங்களில் அதைவிடக் கடின சித்தராகவும் மாறிவிடுவார்கள். மனத்தினால் செய்யும் தொழில்களில் (கற்பனை, கவிதை, திட்டமிடுதல் போன்றவற்றில்) மிகவும் விருப்பமுடன் ஈடுபடுவார்கள். இவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணம் உள்ளதால், மக்களால் பெரிதும் விரும்பப்படுவார்கள்.

இவர்களுக்கு அபார ஞாபக சக்தி உண்டு. எப்போதும் சற்று குழப்பவாதியாகவே இருப்பார்கள். இரக்க குணம் உடையவர்கள் ஆதலால் எளிதில்  உணர்ச்சி வசப்படுவார்கள். எதையும் முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும் கற்பனை சக்தியும் அதிகம் உண்டு.

வேடிக்கையாக பேசக்கூடியவர்கள். பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பார்கள். சாந்தம், சகிப்புத் தன்மை, மேலோரிடத்தில் மரியாதை, கடவுள் பக்தி அதிகம் இருக்கும். பழைய ஞாபகங்களை அடிக்கடி நினைவுக்கு  கொண்டு வந்து சிறு விஷயங்களுக்காக அதிக கவலைப்படுபார்கள்.

தம்முடைய கருத்துக்களை நேரிடையாக வெளியிடாமல் மறைமுகமாக வெளியிடுவார்கள். அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவராக இருந்தாலும் சற்று பயந்த சுபாவம் இவர்களுக்கு உண்டு. கடுமையான பணிகளையும் சுலபமாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள். தன் முயற்சியில் தோல்வி அடைந்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் விடா முயற்சியுடன் செயல்படுவார்கள்.

தூக்கத்திலும் சுய உணர்வு  பெற்றவர்கள். கொடுத்த வாக்கை தவறாமல் நிறைவேற்றுவார்கள், சொன்ன சொல்லை காப்பாற்ற தவறியவர்கள் இவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது. மிகுந்த கலாரசனை உடையவர்கள். ஆதலால்  சங்கீதம், நடனம், நாடகத்துறை போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். எதிலும் தற்பாப்புடன் செயல்படும் இவர்கள் வீண் வம்புக்குச் செல்லமாட்டார்கள்.

பழைய பொருட்களை சேகரித்து வைப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள். பேச்சைக்கூட அளந்து தான் பேசுவார்கள். பல சமயம் துணிச்சலான காரியங்களைச் செய்தாலும் சில சமயங்களில் கோழையாக மாறி விடுவார்கள். இது போன்ற பய உணர்ச்சிகளையும் மென்மையான சுபாவங்களையும் மாற்றிக் கொள்ள வலிமை வாய்ந்த நேர் எண்ணில் பெயர் வைப்பது அவசியம்.
    
இவர்களின் வெற்றிக்கும் அல்லது தோல்விக்கம் ஒரு பெண்ணே காரணமாக இருப்பாள். காரணம் இவர்களுக்குச் சந்தேகம் குணம் அதிகம் உண்டு¢. இதனால் முழுமையாக யாரையும், நம்பாமல் திரும்பத் திரும்ப மற்றவர்களடன் சந்தேகம் கொள்வதால்தான். இவர்களுக்கு எதிரிகள் உருவாகின்றனர். எதையும் பதட்டத்துடனும், ஒருவித சோம்பலுடனும் அணுகும் குணத்தினையும் மாற்றிக் கொண்டால் இவர்கள் நிச்சயம் முன்னேறுவார்கள்.

தங்களது வாக்குறுதிகளை இவர்கள் காப்பாற்றுவது மிகவும் சிரமம். திருநெல்வேலி சென்றவுடன் அல்வா வாங்கி அனுப்புவதாகச் சொல்வார்கள். ஆனால் அனுப்ப மாட்டார்கள்.
சந்திர ஆதிக்கம் நன்முறையில் அமைந்திருந்தால் நல்ல திட்டங்கள் போட்டும் அவற்றில் வெற்றியும் அடைந்து விடுவார்கள். (உ&ம்) தேசத்தந்தை மகாத்மா காந்தி.

தங்களிடம் பல திறமைகள் இருந்தும் துணிந்து செயல்பட விருப்பப்பட மாட்டார்கள். இல்லாததைக் கற்பனை செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில் முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவார்கள். காலையில் சுறுசுறுப்புடன¢ தொடங்குவார்கள். ஆனால் மாலைக்குள் ஊக்கம் குறைந்து, சோர்ந்துவிடும் இயல்பினர்.

இவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணம் உள்ளதால், மக்களால்பெரிதும் விரும்பப்படுவார்கள். கற்பனை கலந்து கவர்ச்சியுடன்பேசுவதால் இவர்களுக்கு மக்களாதரவு உண்டு. பெரும்பாலோருக்குமுன்னோர்கள் சொத்துக்கள் இருக்கும்
இந்த எண்ணின் ஆதிக்கம்குறைந்தவர்கள் வீண்பிடிவாதம் கொண்டு தங்கள் வாழக்கையைத்தாங்களே கெடுத்துக் கொள்வார்கள். நீதிமன்ற வழக்குகளிலும்சிக்கலை தந்து விடும்.

முன்னோர் சொத்துக்களையும் இழக்க நேரிடும்.மனதில் நிம்மதி இருக்காது
விதி எண் 2 ஆக வரும் அன்பர்கள் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள். திருமணம் ஆனவுடன்தான் அம்பாளின் அனுக்கிரகத்திற்கு உட்படுவார்கள். வசதியுடன் மனைவி அல்லது மனைவி வந்தவுடன் வேலை, வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவை இந்த எண்காரர்களுக்கு ஏற்பட்டு விடும். அதிகமாகச் சாப்பிடும் குணம் உள்ளவர்கள். மனோவசியம் மற்றும் மந்திர தந்திரங்களாலும் இவர்களுக்கு ஈடுபாடு உண்டு.

எண் 2 என்பது மனோகாரகனான சந்திரனுக்கு உரியதாகும். இந்தஎண் பெண் தன்மை கொண்டது. எனவே, இந்த எண் ஆதிக்கத்தில்பிறப்பவர்களுக்கு மனோ பலமும், கற்பனைத் திறனும்இயற்கையிலேயே உண்டு. எண்ணின் பலம் குறைந்தால்தன்னம்பிக்கைக் குறையும், மனதில் பல வீண் ஐயங்களும் ஏற்படும்.உலகத்தின் கவிஞர்கள் இவர்களே. தங்களின் காரியங்களை பலகோணங்களில் சிந்தித்த பின்பே தொடங்குவார்கள்.

இதனால் காரியதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இவர்களது மனத்தின்வேகத்திற்கு ஏற்றவாறு இவரது செயல்களில் வேகம் இருக்காது.எனவே, இவர்களைக் கற்பனைவாதிகள் என்று உலகம் சொல்கிறது.பேசிக் கொண்டிருப்பதில் இன்பம் காண்பவர்கள்.

எந்த ஒருவிஷயத்தையும் பல கோணங்களில், உணர்ச்சிபூர்வமாகப்பேசுவார்கள். சிலர் மிகவும் கஞ்சத்தனமாகப் பணம் சேர்ப்பார்கள்.வேறு சிலரோ பெரும் செலவாளிகளாக இருப்பார்கள்.
அடுத்தவர்களைக் குற்றம் சொல்லும் குணத்தையும், வீண் டம்பப்பேச்சையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்குத்துன்பங்கள் தொடர்ந்து வரும்போது தற்கொலை எண்ணம்கூடத்தோன்றும். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் மிகவும் பிரியமுள்ளவர்கள்.

தண்ணீரில் சிலருக்குக் கண்டங்கள் ஏற்படலாம்.எப்படியும் வெளியூர்த் தொடர்பு, வெளிநாட்டுத் தொடர்புகள் ஏற்பட்டுஅவற்றின் மூலம் பல நன்மைகள் அடைவார்கள். அடுதவர்களுக்குப்பெரிதாக யோசனை சொல்வார்கள். ஆனால் தங்கள் அளவில்குறைவாகவே பயன்படுத்திக் கொள்வார்கள். தெய்வ பக்தியும் உண்டு.தங்களின் செயல்கள் மீதே இவர்களுக்கு பல ஐயங்கள் தோன்றும்.சரியாகத் தான் செய்தோமா? இல்லையா? என்று பல தடவைகுழம்புவார்கள்.

இவர் உணர்ச்சி மயமானவ்ரகள். கோபம், பிடிவாம், ஆத்திரம் போன்றகுணங்கள் உண்டு. இக்குணங்களைத் தவிர்த்துக் கொண்டால்தான்மக்களின் மத்தியில் செல்வாக்கு அடையலாம். இந்த எண்காரர்களுக்குகுழந்தை பாக்கியம் நிறைய உண்டு. குறிப்பாக பெண் குழந்தைகள்அதிகம் இருக்கும்.

விளையாட்டுக்களில் நாட்டம் செல்லும். உள் அரங்கவிளையாட்டுக்களை மிகவும் விரும்புவார்கள். எண் பலம்அதிகமானால் இராமனாக இருப்பார்கள். குறைந்தால் இராவணனாகஇருப்பார்கள்.

வாழக்கையில் ஆபத்தான முடிவை (ரிஸ்க்)எடுக்கத் தயங்குவார்கள். அலுவலகத்திலும், வீட்டிலும் எந்தப்பணியையும் முழுமையாக மற்றவர்களை நம்பி ஒப்படைக்கமாட்டார்கள். சஞ்சல சுபாவமம், சபல சித்தமும் இவர்களுடன் கூடப்பிறந்தவைகள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், காரணமற்றகவலைகளினால் தங்களை வருந்திக் கொள்வார்கள். நடக்கக்கூடாது,நடக்க முடியாத நிகழ்ச்சிகளையெல்லாம் கற்பனை செய்து கொண்டு, இவை நடந்துவிடுமோ என்று எண்ணி¢ எண்ணிக் குழம்புவார்கள்.

மனச்சோர்வு வராமல் இவர்கள் பார்த்துக் கொண்டால் செயல்களில்வெற்றி கிடைக்கும். எதிர்காலலம் பற்றிய அழகயி கற்பனைகள்இவர்களுக்கு உண்டு. புதிய புதிய கற்பனைகள் இவர்களுக்கு உண்டு.புதிய புதிய எண்ணங்களும், திட்டங்களும் இவர்களுக்குத் தோன்றம்.இவர்கள் தண்ணீரால் (பஞ்சபூதம்) குறிக்கப்படுகிறார்கள்.

எந்த அளவுக்குத் துணிச்சலாகப் பேசுகிறார்களோ, அந்த அளவுக்குமனதில் பயம் இருந்துகொண்டே இருக்கும். இவர்களுக்கெனத் தனித்தபண்போ, பழக்கவழக்கமோ இருக்காது. எப்போதும் மற்றவர்களைபார்த்து, அவர்களிடன் நடை உடைகளைப் பின்பற்றுவார்கள்.

இதனால் இவர்களுடைய இயல்பும், பழக்கவழக்கங்களும் அடிக்கடிமாறிக்கொண்டே இருக்கும். தாங்கள் எடுக்கும் முடிவினையும் கூடஅடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். எதைப் பற்றியும் விவாதம் செய்வதில் மட்டும் மிகவும் ஈடுபாடு உண்டு.

 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!