இறைச்சி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிறப்பித்த அதிரடி உத்தரவு!
Mayoorikka
1 year ago
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் உத்தரவிட்டுள்ளார்.
கடும் குளிர் காரணமாக ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விலங்குகள் திடீரென இறப்பதால், பொது சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.