அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை
Prabha Praneetha
1 year ago
முட்டையை 50 ரூபாவிற்கு வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்று முட்டை உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர்கள் இதனை தெரிவித்ததாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கால்நடை தீவனத்தின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் கால்நடை தீவனத்தின் விலை மேலும் குறைவடையும் எனவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
முட்டை உற்பத்தியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதன் மூலம் அவர்களின் செலவினங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.