கம்பஹா பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் போதைப்பொருள்! ஆயர்வேத வைத்தியர் கைது!

Kanimoli
1 year ago
கம்பஹா பாடசாலை சிற்றுண்டிச்சாலையில் போதைப்பொருள்! ஆயர்வேத வைத்தியர் கைது!

கம்பஹா பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் அண்மையில் ஐஸ் போதைப்பொருள் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்) பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் கம்பஹா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட போது 6,000 போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர், முதற்கட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் (டிசம்பர் 05) கம்பஹா, புத்பிட்டிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையை நடத்தி வந்த பெண் ஏழு ஐஸ் பொதிகள் மற்றும் 38 மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார்.
எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில், கைதுசெய்யப்பட்ட பெண்ணுடன் தனிப்பட்ட பழிவாங்கல் காரணமாக மூன்றாம் தரப்பினர் போதைப்பொருளை சிற்றுண்டிச்சாலையில் வைத்துள்ளதாக தெரியவந்தது.
இந்தநிலையில் சந்தேக நபரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ருக்மல்கம்வில பகுதியில் உள்ள சிறுவர்களுக்கான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையமொன்றை பொலிஸார் சோதனையிட்டனர், இதன் போது ஆயுர்வேத வைத்தியர் கைது செய்யப்பட்டார்.
ஆயுர்வேத வைத்தியராகக் காட்டிக் கொண்டதாகக் கருதப்படும் கைதானவர், கைது செய்யப்பட்ட போது அவரிடம் 6,576 போதை மாத்திரைகள் மற்றும் 5,500,000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டது.
மையத்திற்கு வந்தவர்களிடம் சிகிச்சை என்ற போர்வையில் அவர் போதை மருந்துகளை விற்பனை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!