கட்டுநாயக்காவில் அதிரடியாக கைதான முக்கிய அதிகாரிகள்
Prabha Praneetha
1 year ago
கொக்கெய்ன், மெத் ஸ்டாம்ப்கள் மற்றும் குஷ் ஆகியவற்றை வைத்திருந்ததாகக் கண்டறியப்பட்ட இரண்டு சுங்கப் பரிசோதகர்கள் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க மற்றும் தனியார் களஞ்சியசாலை ஒன்றில் கடமையாற்றும் இரு சுங்க பரிசோதகர்கள் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
துறைமுகத்தின் சுங்க அதிகாரிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில், சுங்க பரிசோதகர் ஒருவர் நேற்று துறைமுகத்தை விட்டு வெளியேறும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.