சர்வதேச நாணய நிதியத்திற்கு தடையாக இருக்கும் சீனா!

Mayoorikka
3 years ago
சர்வதேச நாணய நிதியத்திற்கு தடையாக இருக்கும் சீனா!

சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிமொழியை நிறைவேற்றுவதில், இலங்கைக்கு சீனா, மிகப்பெரிய தடையாக உள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 2.9 பில்லியன் டொலர்களுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியைப் பெற்றுக்கொள்ள சீனா உட்பட்ட கடனாளிகளிடம் கடன் நிலைத்தன்மை உத்தரவாதங்களை இலங்கை பெறவேண்டியுள்ளது.

இதனை அடிக்கடி சர்வதேச நாணய நிதியமும் வலியுறுத்தி வருகிறது.

சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையின் முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களாக உள்ளன.

இதில் சீனாவின் பங்கு 52 சதவீதமாக உள்ளது. ஜப்பானின் பங்கு 19.5 சதவீதம் மற்றும் இந்தியாவின் பங்கு 12 சதவீதமாகும்.

இதில் இந்தியாவும் ஜப்பானும் கடன் மறுசீரமைப்புக்களுக்கு இணக்கம் வெளியிட்டு வருகின்றன.
எனினும் சீனா, இன்னும் இசையவில்லை.

இந்தியாவுடனான பேச்சுவார்த்தை வெற்றி பெற்றதாக அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி விக்கிரமசிங்க கூறினார். 

இது சீனாவுக்கு எதிரான கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு கிடைக்கவேண்டிய நிதியளிப்புக்கு வீதித்தடையாகவே உள்ளது என்றும் இந்திய செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4