பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகிப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்!

Mayoorikka
3 years ago
பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகிப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்!

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ஆய்வு வெற்றியடைய வேண்டுமாயின் பாடசாலைக்கு போதைப்பொருள் வரும் பிரதான பாதைகளை அடைக்க வேண்டும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்துகாப்பதற்கு , போதைப்பொருள் கொண்டு வரும் முக்கிய விநியோகஸ்தர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தண்டிக்கப்படுவது போல் சிங்கப்பூர் போன்ற நாடுகள் இவர்களையும் தண்டிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவது போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பொறுப்பாகும் எனத் தெரிவித்த அமைச்சர், போதைப்பொருள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடலிலும் வானிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4