ரஷ்யாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு

Prasu
3 years ago
ரஷ்யாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  20 பேர் உயிரிழப்பு

ரஷியா, கெமரோவோவில் உள்ள சைபீரியா நகரில் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

அனைவரும் முதியவர்கள் என்பதால், கட்டிடத்திற்குள் சிக்கியவர்கள் வெளியில் வர முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். 

அதற்குள் தீ மளமளவென பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தின் இரண்டாம் தளம் முழுவதும் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சயில் ஈடுபட்டனர். 

மேலும், கட்டிடத்திற்குள் சிக்கியர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி இதுவரை 20 பேரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ரஷியா முழுவதும் முதியோருக்கான பல முதியோர் இல்லங்கள் பதிவு செய்யாமல் இயங்கி வருவதாகவும், அதிகாரப்பூர்வமாக அவை தனிப்பட்ட சொத்தாக கருதப்படுவதால் ஆய்வுக்கு உட்படுத்த முடியாது எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4