11 மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக 3,596 ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் உறுதி
#SriLanka
#Death
#Police
#Crime
#Arrest
Kanimoli
2 years ago

நாட்டில் இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் பல்வேறு காரணங்களுக்காக 3,596 ஆட்கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
இதை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்த ஆண்டுடன் (2021) ஒப்பிடுகையில் கடத்தல்களின் எண்ணிக்கை சுமார் 2,800 அதிகரிப்பு என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் 2021 ஆம் ஆண்டில் கடத்தல்களின் எண்ணிக்கை 835 என்றும் பேராசிரியர் குறிப்பிட்டார்.



