கடந்த நான்கு வருடங்களில் 1,955 வெளிநாட்டு பிரஜைகளை இலங்கை நாடு கடத்தியுள்ளது

Kanimoli
3 years ago
கடந்த நான்கு வருடங்களில் 1,955 வெளிநாட்டு பிரஜைகளை இலங்கை நாடு கடத்தியுள்ளது

கடந்த நான்கு வருடங்களில் 1,955 வெளிநாட்டு பிரஜைகளை இலங்கை நாடு கடத்தியுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் செயல்திறன் மீளாய்வு அறிக்கையின்படி, 2018 மற்றும் 2021 க்கு இடையில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வெளிநாட்டு பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல்படி, 2018 இல் 678 வெளிநாட்டவர்களும், 2019 இல் 898 பேரும், 2020 இல் 249 பேரும், கடந்த ஆண்டு 130 வெளிநாட்டவர்களும் நாடு கடத்தப்பட்டனர்.
கடந்த ஆண்டு இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட 130 பேரில் 92 பேர் இந்தியர்களாவர், ஒன்பது நேபாளியர்களும்;, ஏழு நைஜீரியர்களும், ஆறு பாகிஸ்தானியர்களும், ஐந்து ரஷ்யர்களும், இரண்டு மாலைதீவியர்களும் இதில் அடங்கியிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4