உக்ரைன் டிரோனை சுட்டு வீழ்த்திய ரஷ்ய படைகள்- இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

#Ukraine #Russia #War #Drone #Death
Prasu
3 years ago
உக்ரைன் டிரோனை சுட்டு வீழ்த்திய ரஷ்ய படைகள்- இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் நாட்டுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகளையும், பண உதவிகளையும் செய்து வருகிறது. 

இதனால் உக்ரைன் ராணுவம், ரஷியா கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் பிடிக்க முயற்சி செய்து வருகிறது. 

தற்போது ரஷியா மற்றும் உக்ரைன் எல்லை பகுதியில் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. இரு தரப்பிலும் துப்பாக்கி சண்டையும் நடந்து வருகிறது. 

இதற்கிடையே ரஷிய ராணுவ முகாம்களை டிரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணியில் உக்ரைன் ராணுவம் ஈடுபட்டது. 

இதற்காக ரஷிய எல்லை பகுதியில் அடிக்கடி உக்ரைன் டிரோன்கள் பறந்து சென்றது. இதனை ரேடார் கருவிகள் மூலம் கண்டுபிடித்த ரஷிய ராணுவம், உக்ரைன் டிரோன்களை தாக்கி அழிக்க நடவடிக்கை எடுத்தது. 

இதையடுத்து ரஷியாவின் தெற்கு பகுதியில் உள்ள விமான படை தளம் அருகே பறந்த உக்ரைன் டிரோனை நேற்று ரஷிய படைகள் சுட்டு வீழ்த்தின. 

அடுத்தடுத்து நடந்த இந்த தாக்குதலில் உக்ரைனின் எல்லை பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. அப்போது நடந்த தாக்குதலில் உக்ரைன் பகுதியில் உள்ள கட்டிடங்களும் இடிந்தது. 

இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியானார்கள். உக்ரைனில் இருந்து 600 மைல் தொலைவில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4