பிரித்தானியாவில் இரவு விடுதியில் இளைஞன் படுகொலை

#Murder #Police #Britain #இளைஞன் #Death #UnitedKingdom #world_news
Nila
1 year ago
பிரித்தானியாவில் இரவு விடுதியில் இளைஞன் படுகொலை

பர்மிங்காம் இரவு விடுதியின் நடன தளத்தில் 23 வயது இளைஞன் குத்திக் கொல்லப்பட்டதை அடுத்து கொலை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் டிசம்பர் 26ம் திகதி உள்ளூர் நேரப்படி 23:45 க்கு சற்று முன் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்பெத்தின் ஆடர்லி வீதியில் உள்ள தி கிரேனில் அந்த நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரை காப்பாற்ற முயற்சித்த போதிலும், சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார் தெரிவித்தனர்.

இது ஒரு Boxing Day இரவில் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த ஒரு இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக Det Insp Michelle Thurgood கூறினார்.

கத்தியால் குத்தப்படுவதற்கு முன், பாதிக்கப்பட்டவரை ஒரு குழு அணுகியதாக பொலிசார் நம்புகிறார்கள்,  அந்த நேரத்தில் இரவு விடுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் இருந்ததை நாங்கள் அறிவோம், என்று Det Insp துர்குட் மேலும் கூறினார்.

நாங்கள் ஏற்கனவே அவர்களில் பலரிடம் பேசியிருந்தாலும், அங்கு இருந்தவர்களிடமிருந்தும், என்ன நடந்தது என்பதை நேரில் பார்த்தவர்கள் அல்லது படம்பிடித்தவர்களிடமிருந்தும் இன்னும் விசாரணை நடத்த வேண்டும் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!