பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது
Kanimoli
1 year ago
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி வாத்துவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதி ஒருவரிடம் 5000 ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.