இலங்கை முழுவதும் பல பகுதிகளில் குளிரான காலநிலை - நுவரெலியாவில் உறைபனி
#SriLanka
#Climate
#NuwaraEliya
Prasu
2 years ago
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் குளிரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் உறைபனி ஏற்படக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையே ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.



