வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விபத்தில் படுகாயமடை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் பலி

Kanimoli
1 year ago
  வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விபத்தில் படுகாயமடை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் பலி

  வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி விபத்தில் படுகாயமடை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேம்படி உடுத்துறையை பிறப்பிடமாகவும் கொடுக்குளாயை வசிப்பிடமாகவும் கொண்ட லதன் என்று அழைக்கப்படும் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

நேற்று முன்தினம் வெற்றிலைக்கேணியில் நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகக்கப்பட்டனர். சம்பவத்தில் படுகாயமடைந்த மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த போது சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்,

சம்பவத்தில் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஆழியவளையை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஆசிரியையான தனது மனைவியை வெற்றிலைக்கேணியிலுள்ள பாடசாலையொன்றில் இறக்கி விட்டு ஆழியவளைக்கு திரும்பி வந்தபோது, அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டின் பட்டி இணைக்கப்பட்டிருக்கவில்லையென்றும், ஹெல்மெட் கழன்று விழுந்ததை தொடர்ந்து விபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்கரையிலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரும், பிரதேச செயலக உத்தியோகத்தரும் மோதி விபத்திற்குள்ளாகினர்.

ஆபத்தான நிலையிலிருந்த பிரதேச செயலக உத்தியோகத்தர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!