நியாயமான தேர்தலுக்காக பஃபரல் அமைப்பின் வேண்டுகோள்
#Election
#Paffrel
Prathees
1 year ago
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தற்போதுள்ள உள்ளூராட்சி மன்றங்களை கலைக்க வேண்டும் என பஃபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
சில உள்ளுராட்சி மன்றங்களின் வளங்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல் நடத்தப்படுமா? இல்லையா என்பதை பொதுமக்கள் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், தேர்தலை நடத்தி மக்களை பிளவுபடுத்துவதாக தெரிவித்தார்.