இங்கிலாந்திற்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

#world_news #UnitedKingdom #weather #people #Rain #Flood
Nila
3 years ago
இங்கிலாந்திற்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை

வரும் நாட்களில் உறைபனி மற்றும் பனிப்பொழிவு எச்சரிக்கையுடன், இங்கிலாந்து முழுவதும் உள்ள மக்கள் குளிர்ந்த காலநிலையை எதிர்கொள்கின்றனர்.

வடக்கு மற்றும் மத்திய இங்கிலாந்து, வடக்கு ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வடக்கு மற்றும் மத்திய வேல்ஸின் சில பகுதிகளை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல் பனிப்பொழிவுக்கான மஞ்சள் வானிலை எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அடுத்த வாரத்தில் குளிர் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் 95 வெள்ள எச்சரிக்கைகள் நடைமுறையில் இருக்கின்றன, வெள்ளம் ஏற்கனவே நூற்றுக்கணக்கான வீடுகளை சேதப்படுத்தியுள்ளது.

பனிக்கான மஞ்சள் எச்சரிக்கை ஞாயிறு மதியம் முதல் புதன்கிழமை காலை வரை வடக்கு ஸ்காட்லாந்தை உள்ளடக்கும் வகைளில் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்கிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு திங்கட்கிழமை மதியம் 02:00 முதல் 08:00 வரை பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4