பேலியகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

#fire #Colombo
Prabha Praneetha
3 years ago
பேலியகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

இன்று காலை பேலியகொடையில் உள்ள தனது வீட்டில் இருந்த 32 வயதுடைய நபர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் சில வாரங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும், அவர் மீது நீதிமன்றத்தில் பல கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4