லண்டனில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 22 வயதான இளைஞர் கைது

#world_news #UnitedKingdom #GunShoot #Women
Nila
1 year ago
லண்டனில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 22 வயதான இளைஞர் கைது

லண்டனில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 22 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய லண்டனில் உள்ள யூஸ்டனில் உள்ள தேவாலயத்தில் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இறுதிச் சடங்கின் போது வானத்தில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஏழு வயது சிறுமி படுகாயமடைந்த நிலையில், 54, 48 மற்றும் 41 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு காயமடைந்திருந்தனர்.

இதில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் 22 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு சற்று முன்னர் லண்டனின் வடக்கே பார்னெட்டில் கைது செய்யப்பட்டார். அவர் தடுப்பு காவலில் இருப்பதாக கூறப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!