இனப்பிரச்சனைக்கு தீர்வு! சந்திரிக்காவிற்கு ஆதரவாக களமிறங்கும் வெளிநாட்டு கோடீஸ்வரர் யார்?

#SriLanka #Sri Lanka President #Chandrika Kumaratunga #Election
Mayoorikka
1 year ago
இனப்பிரச்சனைக்கு தீர்வு! சந்திரிக்காவிற்கு ஆதரவாக களமிறங்கும் வெளிநாட்டு கோடீஸ்வரர் யார்?

இலங்கை தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்படப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையை மீட்டெடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஒரு குழுவோடு அரசியலில் மீண்டும் இறங்க போவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு பின்னால் பல பிரமுகர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்நாட்டு வெளிநாட்டு தொழில்நிறுவனங்கள் இணைந்து நாட்டின் நன்மைக்காக எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அதற்கு உதவியாக உலகளாவிய ரீதியிலே பிரபல்யமாக இருக்கின்ற முன்னனி தமிழ்  நிறுவனம் சந்திரிக்காவிற்கு பின்னால் நின்று அவருடைய செலவுகளையும், பிரச்சாரங்களையும் அவருக்கான உதவிகளையும் செய்து கொண்டிருக்கின்றது.

எதிர்வரும் தேர்தலில் சந்திரிக்காவை போட்டியிட வைப்பதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது .

குறிப்பிட்டு கூறுவதாக இருந்தால் சந்திரிக்கா அந்த நிறுவனத்தினால் வறியவர்களுக்காக  இலங்கையில் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளை திறந்து வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த பல காலமாக இங்கிலாந்தில் அவர் வாழ்ந்த பொழுதும் அந்த நிறுவனத்தோடு நல்ல தொடர்பை பேணிவந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு பெண்ணை இலங்கையின் தலைவராக நியமிப்பதன் ஊடாக உலகளாவிய ரீதியில் ஒரு அனுதாபத்தை பெறலாம் என்ற உள்நோக்கமும் இதற்குள் இருக்கலாம். இதற்கான பேச்சுவார்த்தைகள் பல படித்தவர்கள், ஆன்மீகவாதிகளோடு பிரித்தானியாவிலும் இலங்கையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  

இந்த நிலையிலேயே  உலகளவில் பிரபல்யமான தமிழ் நிறுவனம், இந்திய சினிமாவிலும் முன்னணி வகிக்கும் நிறுவனம் இலங்கையிலே பிரபல்யமான ஒரு அரசியல் குடும்பத்தை சார்ந்த சிங்கள அரசியல்வாதி பெண்ணும் இணைந்து இந்தத்தேர்தலை முன்னெடுக்கும் காரணத்தினால் நிச்சயமாக இது இனப்பிரச்சனைக்கு தீர்வாகவும் அமையும் என பலராலும் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!