கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தை வெற்றி

Prabha Praneetha
1 year ago
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவுடனான பேச்சுவார்த்தை வெற்றி

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போதுவரை முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களை நோக்கும்போது, எமது பொருளாதாரத்தை சரியான பாதையில் தடமேற்றுவதற்காக நாம் முன்னெடுத்த செயற்பாடுகளை  அவதானிக்க முடியும். 

மேலும், இந்தியா மற்றும் சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஒப்புதலை பெற வேண்டிய பணிகள் மாத்திரமே மீதமுள்ளது. 

அந்த இரு நாடுகளுடனும் தற்போது முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக கூறமுடியும். 

விரைவில் அது தொடர்பான பதில்கள் கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!