எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடிப்பு: இலங்கை பிரதிநிதிகள் இருவருக்கு நீதிமன்றம் விடுத்த உடனடி அறிவிப்பு

#SriLanka #Sri Lanka President #Court Order #Police #லங்கா4
Mayoorikka
3 years ago
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடிப்பு: இலங்கை பிரதிநிதிகள் இருவருக்கு நீதிமன்றம் விடுத்த உடனடி அறிவிப்பு

கடந்த வருடம் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் சரக்குகளை ஏற்றிச்சென்ற போது தீப்பிடித்தது. 

தீப் பிடித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பை மாசுபடுத்தியமை உள்ளிட்ட 08 குற்றச்சாட்டுகளின் கீழ், கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் உள்ளூர் முகவர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் 08 பேருக்கு எதிராக கடல்சார் சூழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழங்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ​போது பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4