இலங்கைக்கானஆதரவுக் கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்திடம், சீனா ஒப்படைக்கும்

Kanimoli
3 years ago
இலங்கைக்கானஆதரவுக் கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்திடம், சீனா ஒப்படைக்கும்

இலங்கைக்கான நிதியளிப்பு மற்றும் கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவுக் கடிதத்தை சர்வதேச நாணய நிதியத்திடம், சீனா இன்று ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் நிதி மற்றும் கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவு கடிதத்தை கடந்த திங்கட்
கடந்த 20ஆம் திகதியன்று இலங்கையின் அரசியல் தலைமையைச் சந்திப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கொழும்பில் வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக, ஜனவரி 16 அன்று புதுடில்லி தனது ஆதரவுக் கடிதத்தை இந்தியா, சர்வதேச நாணய நிதியத்திடம் கையளித்தது. 
இதேவேளை இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பயன்ற்ற உட்கட்டமைப்பு துறைமுகம் மற்றும் விமான நிலையத் திட்டங்களுக்கு சீன வங்கிகளின் அதிக வட்டிக் கடன்களே காரணம் என்று குற்றம் சுமத்தப்படுகிறது.
இருந்தபோதிலும், பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்புடன் போராடும் கொழும்பை ஆதரிப்பதில் இந்தியா முதலிடம் வகிப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கிழமை இந்தியா சர்வதேச நாணய நிதியத்திடம் கையளித்தது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4