தங்காலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காதலர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு
தங்காலை மெடகட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் காதலர்கள் இருவர் நேற்று (23) காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பலாந்தோட்டை, மானஜ்ஜவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜயவர்தன ஆராச்சிகே துமிஷ ஓஷதி மற்றும் தங்காலை தங்கெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த அவரது காதலன் எனக் கூறப்படும் 20 வயதுடைய ராமையா அஜித் குமார ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று அதிகாலை 3.45 மணியளவில் விடுதியின் வரவேற்பு மேசைக்கு அருகில் இளம் ஜோடி நாற்காலியில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலும் ஆரம்பகட்ட விசாரணைகளில் உயிரிழந்த நபர் தங்காலை மேதகிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும், நேற்று (23) நள்ளிரவு 12.30 மணியளவில் அம்பலாந்தோட்டை மானஜ்ஜவவில் உள்ள தனது காதலியின் வீட்டிற்கு சென்று முச்சக்கரவண்டியில் அம்பலாந்தோட்டைக்கு அழைத்துச் சென்று தங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.