கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய இலங்கை எதிர்பார்ப்பு: மத்திய வங்கி ஆளுநர்

#SriLanka #Sri Lanka President #Central Bank #Bank #IMF
Mayoorikka
3 years ago
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய இலங்கை எதிர்பார்ப்பு: மத்திய வங்கி ஆளுநர்

சர்வதேச நாணய நிதியம் மூலம் அடுத்த 6 மாதங்களில் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய இலங்கை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நெருக்கடியை எதிர்நோக்கும் அண்டை நாடான இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதி பூண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் (IMF) சர்வதேச நாணய நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் கடன் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இலங்கைக்கு இருதரப்பு கடன் வசதியை வழங்குவதன் மூலம் இந்தியா தனது உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4