கொழும்பு பிரதேசத்தை சுற்றி விசேட போக்குவரத்து திட்டம்
#Colombo
Prathees
1 year ago
75வது தேசிய சுதந்திர தின விழா ஒத்திகை இன்று தொடங்குகிறது. இன்றும் நாளையும் பெப்ரவரி 1, 2 மற்றும் 3ஆம் திகதிகளில் காலி முகத்திடலில் ஒத்திகை நடைபெறவுள்ளது.
இதன்காரணமாக சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறும் பெப்ரவரி 4ஆம் திகதி ஒத்திகை தினங்களிலும் கொழும்பு பிரதேசத்தை சுற்றி விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட போக்குவரத்துத் திட்டத்தின் காலப்பகுதியில் கொழும்பிற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் வாகனங்கள் மாற்று வீதிகளின் ஊடாக பயணிக்குமாறு பொலிஸார் தெரிவித்தனர்.