ஷாப்டரின் மர்ம மரணம் தொடர்பான தகவல்கள் அடுத்த இரு வாரங்களில் வெளியிடப்படும்: அமைச்சர் டிரான்
#Investigation
#Police
Prathees
1 year ago
பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம் தொடர்பான தகவல்கள் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ளதாகவும், இது கொலையா அல்லது தற்கொலையா என கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.