துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் பொதுமக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்!
#SriLanka
#world_news
#Death
#Earthquake
#search
#sri lanka tamil news
#Sri Lanka President
#Lanka4
Mayoorikka
1 year ago
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் ஏதாவது தகவல் இருந்தால் தெரிவிக்குமாறு துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு அல்லது துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு தகவல்களை சமர்ப்பிக்க முடியும் என துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.
துருக்கியில் நேற்று இடம்பெற்ற நில நடுக்கத்தில் 3500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.