55 அரச அலுவலகங்களை மூட அரசாங்கம் தீர்மானம்
#SriLanka
#Lanka4
#government
#Sri Lanka President
#Colombo
#sri lanka tamil news
Prabha Praneetha
1 year ago
அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அரச அலுவலகங்களை மூட இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
திட்ட அலுவலகங்கள் , திட்ட முகாமைத்துவ அலகுகளை மீளாய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கையின் முறையில் அமைச்சரவை குறித்த தீர்மானத்தை எட்டியுள்ளது .
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் .
முன்னாள் அமைச்சின் செயலாளர் எச்.டி. கமல் பத்மசிறி தலைமையில் ஜனாதிபதியினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 32 திட்ட அலுவலகங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது