அதிரடி காட்டும் சுந்தர் பிச்சை இனி AI மூலம் வேற லெவலில் google

Mani
3 years ago
அதிரடி காட்டும் சுந்தர் பிச்சை இனி AI மூலம் வேற லெவலில் google

பயனர்களுக்கு நேர்த்தியான மற்றும் துல்லியமான தேடல் அனுபவத்தை வழங்குவதில் கூகுள் அடுத்த கட்டத்தை எடுத்துள்ளது.
தேடல் என்பது இணையத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். கூகிள் அனைத்து கேள்விகளுக்கும் விரைவாக பதிலளிக்கிறது, ஏனெனில் இது ஒரே தேடுபொறியாகும். சில நேரங்களில் "பதில்கள்" அபத்தமானது, ஆனால் பெரும்பாலான நேரங்களில் கூகிள் 95% சரியான பதிலை அளிக்கிறது. பிளாட்ஃபார்மில் முதல் தேடுபொறியாக Yahoo அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் அது கூகுளின் புதுப்பிப்புகளைத் தொடராததால் அது காலாவதியானது. அப்போதிருந்து, கூகிள் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்து வருகிறது, அதனால்தான் இது இணையத்தில் மிகவும் பிரபலமான தேடுபொறியாகும்.
தனது பயனர்களின் விருப்பம் என்ன, தேவை என்ன என்பதை துல்லியமாக அறிந்து அதற்கேற்ப அப்டேட்களை செய்து கொண்டே வருகிறது. அதனால் தான் உலகம் முழுவதும் கோடிக் கணக்கான பயனர்களை கொண்டுள்ளது கூகுள். இந்நிலையில் தான் தனது அடுத்த வெர்ஷன் அப்டேட்டை அடுத்த வாரம் தொடங்க உள்ளது கூகுள் நிறுவனம். இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை. கூகுளின் போட்டி தேடு பொறியான மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பிங்(Bing) தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவை புகுத்த உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் விழித்துக் கொண்டது கூகுள். பதறிய கூகுள் உடனடியாக தனது தேடுபொறியிலும் செயற்கை நுண்ணறிவை புகுத்த வேண்டும் என திட்டவட்டமாக முடிவெடுத்து அதற்கான பணிகளை தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு மே மாதம் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு உணர்வுகள் இருப்பதாகக் கூறிய பொறியாளர் ப்ளேக் லெமோயின் என்பவரை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது வேறு கதை.
கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது பொறியாளர்கள் தேடுபொறியில் அறிவார்ந்த தொழில்நுட்பத்தை வேகப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் பணிபுரிந்து வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார். ப்ளூம்பெர்க் செய்திக்கு அளித்த பேட்டியில், கூகுள் தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் மிகவும் உற்சாகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனம் அடுத்த வாரம் பார்ட் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பயனர்களுக்கு மிகவும் துல்லியமான பதில்களை வழங்கும் என்று கூகுள் கூறுகிறது, இது பயனர்களுக்கு இணையத்தைப் புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இனி பயனர்கள் நம்பகமான மற்றும் துல்லியமான தரமான பதில்களைப் பெறுவார்கள் என்று கூகுள் நம்புகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4