சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு -சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

#SriLanka #sri lanka tamil news #Tamil #Tourist #Lanka4 #Development #Tamilnews
Soruban
3 years ago
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு -சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

 பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் 26506 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 07 ஆம் திகதி வரை வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 51 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 545 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த மாதமுதல் வாரத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 25 சதவீதமானவர்கள் ரஷ்யர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4