நிலை வாசல் வழியே செல்வம் பெருக! வசம்பு பூஜை

#Astrology #Tamilnews
Mani
1 year ago
நிலை வாசல் வழியே செல்வம் பெருக! வசம்பு பூஜை

அனைத்து பிரச்சனை தீர்ப்பதற்கு இன்று முக்கிய பங்கு வைப்பது பணம், நம் வீட்டில் நிலை வாசல் வழியாக வீட்டிற்கு பணம் நிற்காமல் வந்து கொண்டிருக்க நம்ம ஒரு சில பரிகாரம் செய்ய வேண்டும்,  இந்த பரிகாரம் பண பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய சக்தி வாய்ந்த பரிகாரம்.  இதை நீங்கள் ஒரு முறை செய்து விட்டால் போதும் வீட்டில் எப்பொழுதும் பணம் கஷ்டங்கள் வராது.

கடன் கொடுத்த பணத்தை திரும்பி பெற இயலாமல்  கஷ்டப்படுபவர்களுக்கு இந்த பரிகாரம் நல்ல பலன் கொடுக்கும்,  இதை செய்வதன் மூலம் உங்கள் வீட்டிற்கு உங்கள் கைக்கும் பணம் தடைப்படாமல் வரும் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். 

நம் வீட்டிலேயே இருக்கும் இந்த இரண்டு பொருட்களையும் நாம் ஒன்றாக சேர்க்கும் போது அதில் இருந்து அதீத சக்திகள் வெளியேறும் அது இரண்டு பொருட்கள் சக்திகள் ஒன்று வசம்பு மற்றொற்று பரிகாரம்.  பரிகாரம் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி கண் திருஷ்டி எதிர்மறை ஆற்றல் அனைத்தையும் விரட்டி அடித்து விடும்.

இந்தப் பரிகாரங்கள் செய்வதற்கு இரண்டு பொருட்களோடு,  படிகாரம் இரண்டு கல்லாக எடுத்துக்கொண்டு கர்ஷிப் அளவிலான சதுர வடிவில் இருக்கும் பச்சை துணியை எடுத்துக்கொண்டு அதில் இருந்த பொருட்களை எல்லாம் வைத்து ஒரு இறுக்கி ஒரு முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள் பின் வீட்டில் நிலை வாசலில் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து முடிச்சு போட்டு தயார் செய்து வைத்திருக்கும் துணியை நிலை வாசலில் கட்டி விட்டு நிலை வாசல் தேவதைகளையும் குலதெய்வங்களையும் மனதார நினைத்து மனம் உருகி வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

பரிகாரத்தை எப்போது செய்ய வேண்டும் என்றால் காலை சூரிய பகவான் உதிக்கும் முன் முடிச்சு தயார் செய்து கொள்ளவும், பின்பு வீட்டின் நிலை வாசலில் கட்டி தொங்க விட வேண்டும் இந்த பரிகாரத்தை நாம் செய்து வந்தால் வீட்டில் இருக்கும் பண பிரச்சினைகள் கடன் தொல்லைகள் அனைத்தும் தீரும்.