மாநில அளவிலான கத்தி சண்டை போட்டியில் கண்ணமங்கலத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

#Tamil Student #Student #School Student #sports
Mani
1 year ago
மாநில அளவிலான கத்தி சண்டை போட்டியில் கண்ணமங்கலத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாகர்கோவில் ஸ்டெல்லா மேரீஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கத்தி சண்டை போட்டியில் கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவர் டி.அருண் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இன்று பள்ளி முதல்வர் ஆர்.கருணாநிதி தலைமையில் மாணவர் அருணுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. ஆசிரியர் சங்கச் செயலர் என்.சுப்ரமணி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவர்த்தனன் தலைமை வகித்தார். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்களை வழங்கிய பாரதிதாசன் மற்றும் நன்கொடையாளர்களை பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சரவணன் பாராட்டினார். மேலும், மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் ஆர்.கார்த்திகேயன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்.அமுதா, ஜி.அன்பு, குமரன், வெற்றி பெற்ற மாணவர் அருணின் பெற்றோர்கள் ஆகியோரைப் பாராட்டினர். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் எம்.ராஜா நன்றி கூறினார்.