கர்நாடக வனத்துறை எல்லையில் துப்பாக்கி சூடு தமிழக மீனவர் உயிரிழந்தார்

#Fisherman #GunShoot #TamilNadu Police #sri lanka tamil news #M. K. Stalin
Mani
1 year ago
கர்நாடக வனத்துறை எல்லையில் துப்பாக்கி சூடு தமிழக மீனவர் உயிரிழந்தார்

சேலம் சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் காவல் நிலை சரகத்திற்கு உட்பட்ட கோவிந்தம் பாடியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான். காரவடையான் மற்றும் அவர் ஊரை சார்ந்த ஆறு பேரும் சேர்ந்து காவிரி ஆற்றில் மீன்பிடிக்க சென்றார்கள்.  அப்பொழுது கர்நாடகா மாநில வளத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ராஜா என்ற காரடையான்  உயிரிழந்துள்ளார்.

ராஜா என்ற காரவடையான்  உடல் சென்னம்பட்டி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து காரவடையான் ஊரை சேர்ந்த மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர், தமிழக முதல்வரும் மு க ஸ்டாலின் அவர்கள் கர்நாடகா மாநில வளத்துறையினர் மீது கண்டனம் தெரிவித்துள்ளார் மற்றும் ராஜா என்கின்ற காரவடையான் மறைவுக்கு இரங்கலை தெரிவித்துள்ளார் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் மேலும் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் நிதி உதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.