தானே மாறும் பார்...கண்ணாடி உடைய கல் எறியும் மூடர் போல நாமும் இங்கே வாழவோ? இன்றைய கவிதை 20-02-2023.
#கவிதை
#கண்ணாடி
#இன்று
#தகவல்
#லங்கா4
#Poems
#Glass
#today
#information
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

தானே மாறும் பார்
*******************************
கண்ணாடி உடைய
கல் எறியும்
மூடர் போல நாமும்
இங்கே வாழவோ?
உண்மை தெரிந்து - நாம்;
நடந்து கொள்ள - அதை;
ஏளனம் செய்யும் - வேளை;
கூணிக் குறுகி நிற்கவோ?
பொறுப்போடு நடந்து
நன்மை ஆகிட
வாழும் மனிதர் அவர்
வழியில் நடப்போம்.
தெரிவு சரியானால்
பாதை திசை மாறுமோ?
வறுமை வந்து எமை
அணைத்துக் கொள்ளுமா?
தனியே நடந்து - நாம்;
கொண்ட தாகம் -தான்;
தணிய நடந்தால் -தானே;
மகிழ்வு சேராதோ?
தெளிவாக அறிந்து
தெளிய நடந்தால்
மாறும் பாரும் நம்
முட்டாள்த் தனம்.
........ அன்புடன் நதுநசி



