மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சுடர் ஏற்றி ஆர்ப்பாட்டம்!

#SriLanka #Sri Lanka President #Protest #Electricity Bill #Lanka4
Mayoorikka
3 years ago
மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சுடர் ஏற்றி ஆர்ப்பாட்டம்!

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திவுலபிட்டிய நகரில்  சுடர் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தேசிய மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் திவுலப்பிட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், மின்சார பாவனையாளர் சங்கம் மற்றும் மக்கள் கட்சி குழுவினரும் பாதயாத்திரையாக அவ்விடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் திவுலப்பிட்டி பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும், மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க சஞ்சீவ உள்ளிட்ட சில உறுப்பினர்களும் கலந்துகொண்டதுடன், எதிர்ப்பு பதாகைகளை ஏந்தியவாறு இரண்டு மணித்தியாலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4