ஜனாதிபதியின் கருத்து முற்றிலும் பொய்யானது: எந்த செய்தியும் அனுப்பவில்லை: முஜிபுர் ரஹ்மான்

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Parliament #Colombo #Lanka4
Mayoorikka
3 years ago
  ஜனாதிபதியின் கருத்து முற்றிலும் பொய்யானது: எந்த செய்தியும் அனுப்பவில்லை: முஜிபுர் ரஹ்மான்

பாராளுமன்றத்தில் கூறியது போன்று ஜனாதிபதி தமக்கு எந்த செய்தியும் அனுப்பவில்லை என கொழும்பு மேயர் வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது எனவும் அவ்வாறு செய்தி அனுப்பியிருந்தால் அது தவறான முன்னுதாரணமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படாது என செய்திகளை அனுப்புவதற்கு ஜனாதிபதி தேர்தல் ஆணையாளர் அல்ல எனவும் தேர்தல் ஆணையாளரே தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி அல்ல எனவும் அவர் கூறுகிறார்.

அந்தச் செய்தியை அனுப்புவதற்கு முன்பே தேர்தல் நடத்தப்படாது என்ற முன்னறிவிப்பு ஜனாதிபதியிடம் இருந்ததையும் அவர் உறுதிப்படுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்க   பிரதமராக இருந்தபோது அவருக்கு அமைச்சுப் பதவி வழங்குவது பற்றிப் பேசியதாகவும், ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் தனது நெருங்கிய உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4