குரூப்-2 தேர்வில் குளறுபடி: தேர்வர்களின் பதிவு எண்கள் மாறியதால் குழப்பம்..!

#Examination #exam #Tamil Nadu
Mani
1 year ago
குரூப்-2 தேர்வில் குளறுபடி: தேர்வர்களின் பதிவு எண்கள் மாறியதால் குழப்பம்..!

குரூப் 2 முதன்மை எழுத்து தேர்வில், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் பதிவு எண்கள் மாறி வந்ததால், முற்பகல் தேர்வு தாமதமாக தொடங்கிய நிலையில், அதனை ஈடு செய்யும் விதமாக, பிற்பகல் தேர்வு இரண்டரை மணிக்கு தொடங்கியது.

தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்ட தேர்வு மையங்களில், 55 ஆயிரத்து 71 பேர் குரூப் 2 தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில், சென்னை, மதுரை, ஈரோடு உட்பட பல மாவட்டங்களில், காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டிய தமிழ்மொழி தகுதி தேர்வு மிகவும் தாமதமாக தொடங்கியது.

வருகை பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவு எண்களின் வரிசையிலும், வினா தாள்களில் உள்ள பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக, தேர்வு தாமதமானதாக விளக்கமளிக்கப்பட்டது.

இதனை ஈடு செய்யும் வகையில், பிற்பகல் தேர்வு, 2 மணிக்கு பதிலாக, 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்க்கப்பட்டது.