அரச நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை உடைந்துள்ளது: பிரசன்ன ரணதுங்க

#SriLanka #Sri Lanka President #City #Minister #government #Development #Department #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
3 years ago
அரச நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை உடைந்துள்ளது: பிரசன்ன ரணதுங்க

சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தவறுகளினால் அரச நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை உடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்  பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

  சில அதிகாரிகள் செய்யும் தவறுகளினால் அரசியல்வாதிகளை திட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் மனித வள முகாமைத்துவப் பிரிவுக்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் ISO 9001: 2015 தரச் சான்றிதழை வழங்குவதை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

பொது நிறுவனங்களை பொது நிறுவனங்களாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் இன்றியமையாதது என சுட்டிக்காட்டிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தரமான விருதுகளை வென்று உரிய தரத்தை பேணுவதற்கு நிறுவனத்திலுள்ள அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4