கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு மிரட்டல் விடுத்த ஆயுததாரிகள்

#Argentina #Player #GunShoot #Warning #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு மிரட்டல் விடுத்த ஆயுததாரிகள்

அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து ஜாம்பவான் லியோனஸ் மெஸ்ஸி. இவருடைய மனைவியின் குடும்பத்திற்கும் சொந்தமான பல் பொருள் அங்காடி ஒன்று ரோசாரியோ நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. 

இங்கு நேற்று அதிகாலை மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் லியோனஸுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் சென்றுள்ளனர்.

அதில் அவர்கள் எழுதியிருந்ததாவது, “உனக்காக நாங்கள் காத்திருக்கிறோம் மெஸ்ஸி. ஜாவ்கின் ஒரு நார்கோ. அவர் உன்னை பாதுகாக்க மாட்டார்” என எழுதப்பட்டிருந்தது. 

இதில் குறிப்பிடப்பட்ட ஜாவ்கின் என்பது மெஸ்ஸிக்கு சொந்த ஊரான ரோசாரியோவின் மேயர் ஆவார். இந்த தாக்குதலின் போது யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. 

இதனை அடுத்து தாக்குதல் சம்பவம் குறித்து மேயர் ஜாவ்கின் கூறியதாவது “குற்றவாளிகள் கிரிமினல் கும்பல்களை சேர்ந்தவர்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4