ஹரியானாவில் லாரியும் பேருந்தும் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.

#India #Accident
Mani
1 year ago
ஹரியானாவில் லாரியும் பேருந்தும் மோதிக்கொண்டதில் 7 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.

அரியானாவின் அம்பாலாவில் பேருந்து மீது டிரக் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.யமுனா நகர் - பஞ்ச்குலா நெடுஞ்சாலையில் நேற்று இந்த விபத்து நடந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த பஸ் மீது லோடு ஏற்றி வந்த லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அப்போது லாரி கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர், 4 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் உயிர் தப்பினர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.