இங்கிலாந்தில் வீட்டுபிராணிகள் மூலம் பரவும் அபூர்வ நோய்

#England #Disease #Vaccine #people #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
இங்கிலாந்தில் வீட்டுபிராணிகள் மூலம் பரவும் அபூர்வ நோய்

இங்கிலாந்தில் செல்லப்பிராணிகள் மூலம் பரவும் அபூர்வ நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இங்கிலாந்தில் முதல் முறையாக கடுமையான வலியுடன் கூடிய கொப்புளங்களை உருவாக்கும் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு இந்த பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூனையின் உடலில் உருவாகும் இந்த நோய், கீறல் அல்லது பூனை கடி மூலம் மனிதர்களுக்கு பரவும் என்றும் பிரேசில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டுவரப்பட்ட பூனை மூலம் இந்த நோய் பரவியுள்ளது எனவும் இங்கிலாந்து மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. 

இந்த பூஞ்சை தொற்று எலும்புகளையும் மூட்டுகளையும் பாதிக்கலாம் என்றும் சிலருக்கு நுரையீரல் மற்றும் மைய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4