பிரதமர் மோடியின் வாரணாசி மாவட்டத்தில் ரூ.300 கோடி செலவில் புதிய கிரிக்கெட் மைதானம்

#India #Prime Minister #Cricket
Mani
1 year ago
பிரதமர் மோடியின் வாரணாசி மாவட்டத்தில் ரூ.300 கோடி செலவில் புதிய கிரிக்கெட் மைதானம்

உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.300 கோடி செலவில் இந்த மைதானம் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.

வாரணாசியில் கிரிக்கெட் மைதானம் கட்ட பிசிசிஐ இடம் தேர்வு செய்துள்ளது. செயலாளர் ஜெய்ஷா, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியம் மற்றும் லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்திற்குப் பிறகு, வாரணாசி கட்டப்படும் மூன்றாவது சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியமாகும். இந்த மைதானத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.