மண்சரிவால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் செய்யுமாறு ஜீவன்தொண்டமான் பணிப்புரை

#SriLanka #sri lanka tamil news #Lanka4 #Minister #Tamil People #Tamil #Tamilnews #Local council
Prabha Praneetha
3 years ago
மண்சரிவால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் செய்யுமாறு  ஜீவன்தொண்டமான் பணிப்புரை

பண்டாரவளை- கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார் 

அத்துடன், மண்சரிவு தொடர்பில் ஆராய்ந்து தமக்கு விரிவானதொரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அனர்த்தம் தொடர்பில் இன்று அமைச்சரவைக் கூட்டத்திலும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் .

அதன் மூலம் மக்களுக்கு தேவையான அடுத்தக்கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4