நன்றி சொல்ல செயல்  எனினும் நீரில் மீன். விளைவு தந்த வியப்புக்கு ஏதும் ஆச்சரியம் இருக்குமோ?. ஆடம்பரமற்ற அழகு. - நதுநசி. இன்றைய கவிதை 04-04-2023.

#கவிதை #முதியோர் #இன்று #தகவல் #லங்கா4 #Poems #Elder #today #information #Lanka4
நன்றி சொல்ல செயல்  எனினும் நீரில் மீன். விளைவு தந்த வியப்புக்கு ஏதும் ஆச்சரியம் இருக்குமோ?. ஆடம்பரமற்ற அழகு. - நதுநசி. இன்றைய கவிதை 04-04-2023.

நன்றி சொல்ல செயல் 
எனினும் நீரில் மீன்.
************************************

விளைவு தந்த
வியப்புக்கு ஏதும்
ஆச்சரியம் இருக்குமோ?.
ஆடம்பரமற்ற அழகு.

செயல் இருக்கும்.
செய்திடும் ஆற்றல்
அதுவும் இருக்கும்.
அடுத்து என்னவோ?

கொளுத்தும் வெயில்.
கொப்பளித்த மழை.
திட்டித் தீர்த்த மனம்
திகட்டிய போது மௌனம்.

பாராட்டிப் போகும்
பாசம் பார்த்தேன்.
பெரிய மனிதரும் கூட
பெருமைக்கு தானே!

திறமை இருக்கிறது.
திட்டமிட்ட செயலும்
தீர்வு காணும் நோக்கும்
தீர்க்கமான முடிவுகளோடு.

வானத்து நிலவும்
காலைச் சூரியனும்
கதை பேசிய நாட்கள்
கண்டதுண்டு இங்கே!

அங்கே அவை எப்போதும்
கொண்டது இல்லை.
 பொறாமை ஒன்றில் ஒன்று.
நின்று  கொண்டதும் இல்லை.

இன்று வரை சார்ந்து
நகர்ந்து மெல்லச் செல்ல
காலம் நகர்கிறது.
மூப்பாக்கி எமையிங்கு.

காலைப்பூ மாலை
காணாதிங்கு போகும்.
சிறகடித்த சிட்டும்
மாலை தோனது தேடாது.

தேவை இருக்கும் போது
தேடிவந்த  சொந்தம்
தேவை உனக்கு என்றால்
தேடும்படி ஆக்கும்.

செயல் விளைவு நலம்
நன்றி சொல்லும்படி
இருந்த போதும் நீ
நீரில் மீனாக உன் வாழ்வு.

                                                                                                 ......... அன்புடன் நதுநசி.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4