மூக்கையாத்தேவர் தமிழ் இனத்தின் தலைவர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் புகழாரம்!

#Tamil Nadu #Tamil People #sri lanka tamil news #Tamil #Tamilnews
Mani
1 year ago
மூக்கையாத்தேவர் தமிழ் இனத்தின் தலைவர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் புகழாரம்!

 

ஒரே நேரத்தில் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் போட்டியிட்டு வென்ற பெருமைக்குரியவர் தான் மூக்கையா தேவர்.இவர் கச்சத்தீவுக்கு இலங்கை வழங்கப்பட்டபோது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவராக இருந்து பல ஆண்டுகள் பணியாற்றியதும் இல்லாமல் காந்தியை இயக்கங்களோடும் இணைந்து பணியாற்றியவர் என குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரத்தில் பாராளுமன்ற சட்டமன்றம் தேர்தலில் ஒரே நேரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என பெருமைக்குரியவர்.இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுது கட்சி தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது அப்பொழுது இவர் இந்திராகாந்தி பார்த்து கட்சி தீவை எடுத்துக் கொடுப்பதால் எங்கள் மக்களுக்கு நீங்கள் மிகப்பெரிய துரோகம் செய்கிறீர்கள் என குற்றம் சாட்டியவர்.ஒரு நேர்மையான அரசியல்வாதி துணிச்சல் மிக்கவர் ஆற்றல் சிறந்த பண்பாளர் ஒரு அரசியல் தலைமை கிடைப்பது அரித்தினும் அரிது.

இவர் தமிழ் இனத்துக்காக குரல் கொடுத்த தலைவரில் இவரும் ஒருவர் அவரைப் போற்றும் விதமாக அவருக்கு நினைவிடம் அமைத்து உசிலம்பட்டியில் வருகிறது.
அவரைப் போற்றும் வகையில் வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டத்தை உசிலம்பட்டியில் நாம் தமிழர் கட்சி நடத்தும் அதில்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவேன். மேலும்  அண்ணாவிற்கு தற்காலிக சபாநாயகராக இருந்து பதவி பிரமாணம் செய்து வைத்தவர் என பெருமைக்குரியவர். எம்ஜிஆர் அவருக்காக தான் அறிவித்த வேட்பாளரை திரும்ப பெற்றார்.